எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை
நத்தைச்சூரி மூலிகை
எதிரிகள் அஞ்சி நடுங்கி மிரண்டு ஓட மூலிகை காப்பு ரட்சை
உனக்கென்ன சூரிய கிரணந்தன்னில்
உதயமாம் சூரிவேர் காப்புக் கட்டி
எனக்கென்ன உபசரித்து வேரை வாங்கி
எந்திரமாய் வெள்ளி செம்பில் பொதித்து
தனக்கென்ன எதிரி வந்து தாக்கும் போது
தாக்குவாய் மணிகட்டிச் சிங்கம் போல்
உனக்குமவன் தோற்றோடிப் போவான்
உனைக் கண்டால் சர்ப்பம் போல் ஒடுங்குவானே
மச்சமுனி - 800
சூரிய கிரகணம் அன்று கிரகணம் பிடிக்கும் போது நத்தைச்சூரி மூலிகை க்கு காப்புக் கட்டி, சாப நிவர்த்தி செய்து, பலி கொடுத்து வேரை பறித்து வெள்ளி,செம்பு இரண்டையும் சேர்த்து உருக்கி தாயத்து போல் செய்து அதனுள் நத்தைச்சூரி வேரை வைத்து மூடி வலதுகை புஜத்தில் காப்பு ரட்சையாக கட்டிக் கொள்ளவும்.
நம்மைக் காணும் எதிரிகள் அஞ்சி நடுங்குவர்.பருந்தைக் கண்ட பாம்பைப்போல் அடங்கி ஒடுங்குவர்.சண்டை செய்ய நேரிட்டால் சிங்கத்தைக் கண்டது போல் மிரண்டு ஓடிப் போவான்.
சித்தர்கள் அதிசயம் தொடரும்.....
நன்றி !
சித்த மருத்துவர் பிரியா
[
Dr.PRIYA B.S.M.S.,M.D., ]
siththarkalathisayam@gmail.com


welcome
ReplyDeleteஆஹா. இது ஒரு நல்ல செய்தி. மிக்க நன்றி.
ReplyDeleteநல்ல தகவலுக்கு மிக்க நன்றி ஆனால் எங்க ஊரில் இம்மூலிகை கிடைக்க அரிது
ReplyDeleteWhere to buy the nathaisuri mooligai?
ReplyDeleteThiruvalluvar.